Jan 10, 2012

அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்

 

 

அப்பாவைப் புனிதப்படுத்துதல்

அப்பாவின் நண்பர்கள்
ஊடகங்களில் வருகிறார்கள்lakshmimanivannan
திரைப்படங்களில் நடிக்கிறார்கள்
அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே
சிறுவன் பார்க்கிறான்

அப்பாவின் உறவினர்கள்
பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள்
பதவிகளிலிருக்கிறார்கள்
நிறுவனங்கள் இயக்குகிறார்கள்
சிறுமி கேள்விப்படுகிறாள்

அப்பா அன்புள்ளவரா
சொல்லத் தெரியாது
பண்புள்ளவரா
இல்லை
வீதிகளில் சண்டையிட்டு
வீட்டுக்கு வருபவர்
வீட்டில் சண்டையிட்டு
வீதிகளில் நுழைபவர்

அப்பா
எப்போது வீட்டுக்கு வருவார்
தெரியாது
எப்போது வெளியிலிருப்பார்
தெரியாது
கைகால் ஒடிந்தால் மருத்துவமனை
கலவரமென்றால் காவல்நிலையம்

மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார்
பள்ளிக்கூடத்துக்குத் துணைவரமாட்டார்
சாப்பாட்டில் குறி இவற்றைத் தவிர
அப்பா என்ன முடிவெடுப்பார்
தீர்மானிக்க முடியாது

அப்பா சண்டையா சச்சரவா
தெரியாது
வேண்டுமா வேண்டாமா
தெரியாது
அதிகமானால் அச்சம்
அப்பா அளவாய்ச் குடித்தால்
விளையாட வருவார்

அப்பாவுக்கு என்னென்ன பிடிக்கும்
தெரியாது
எது பிடிக்காது
தெரியாது

அப்பாவுக்கு என்னென்ன நோய்கள்
முற்றிய மனநோய்
ரகசியமான மருத்துவ அறிக்கை மட்டும்
தெருக்களில் கிடக்கிறது

^^^^^

அப்பாவைப் புனிதப்படுத்துதல் தொகுப்பு பக்கம் 11-12

நன்றி: தமிழ் ஸ்டுடியோ

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்