Jan 1, 2011

சாமக்கொடை- வித்யாஷங்கர்

சாமக்கொடைVidhyashankar

பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள் 
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

பேருக்குத்தான் பெயர்

சிற்றருவி
பேரருவி
ஐந்தருவி
பேர் என்னவானாலும்
அருவி ஆறாகாது
அதனதன் வேகமும்
தன்மையும்
அதனதன் இயல்பு
பேருக்குத்தான் பெயர்

கொலை = கவிதை

ஒரு நல்ல கவிதை
எழுதுவதும்
ஒரு கொலை செய்வதும்
ஒரே மாதிரித்தான்
திட்டமிடல்
ஓர்மை
தேர்ந்தெடுத்தல்
தொடர் வன்மம்
தீராத ரணம்
இரண்டுக்கும் பொது
அலட்சியங்கள்
அவமதிப்புகள்
புறக்கணிப்பு
பொல்லாப்பு
சேதாரமாகும் பொழுதுகள்
முனைப்பை
தீவிரப்படுத்துகின்றன
கொலைக்கான
கருவிகளை
சூழலே
தந்து உதவுகின்றன
எங்கேஎப்படி
இரக்கமற்று
உயிர் பறிப்பது
எதுவும்கவிஞனின்
திட்டமிடலில் இல்லை
அடையாளத்தை
விட்டுச் செல்வதா
அடையாளத்தை
அழித்துச் செல்வதா
தருணங்களே
தீர்மானிக்கின்றன
கவிதையிலும்
கொலையிலும்
எதிராளி
கொல்லப்பட்டதும்
பெறுகிற
விடுதலை வேட்கையோடு
கவிதையின்
வரிவடிவமும்
நிறைவடைகிறது.
தலைமறைவானால்
எல்லோரும் தேடுவார்கள்
வாய்க்கு வாய் பேசும்
நல்ல கவிதையை
முன்வைத்து
நேரும் உறவு போல
கொலையில்
சிந்திய ரத்தமும்
சேதமும் சிதைவும்
வெளித் தெரியும்
கவிதையில் தெரியாது
ஆனாலும்
கொலை செய்வதைவிட
சிரமமும் கடினமுமானது
ஆகச் சிறந்த கவிதையை
எழுதுவது

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்